மியன்மார் இணையக் குற்ற மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள்
மியன்மாரின் (Myanmar) மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் என்ற இணையக் குற்ற மையங்களிலிருந்து, 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் இலங்கையின் வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மியன்மார் அரசாங்கத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் உட்பட இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த விலைமதிப்பற்ற உதவிக்கு இலங்கையின் வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடும் போது மனித கடத்தல் திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்