இந்தேனேசியாவில்15 பேரின் உயிரைப் பலியெடுத்த படகு விபத்து!
இந்தோனேசியாவில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில்15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று(24) அதிகாலை வேளை இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரிகுடாவின் வழியாகப் பயணிக்கும் போது
இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான கெந்தாரிக்கு தெற்கே சுமார் 200 கிலோமீற்றர் (124 மைல்) தொலைவில் உள்ள மூனா தீவில் அமைந்துள்ள விரிகுடாவின் வழியாகப் படகு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 பேர் பயணித்த குறித்த படகில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு இல்லாது படகுகள் பயணிப்பதால்
சுமார் 17,000 இற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடாக இந்தோனேசியா விளங்குகின்றது, இதனால் இங்கு படகு பிரயாணமே பொதுப் போக்குவரத்து முறையாக விளங்குகின்றது.
எனவே படகுப் பிரயாணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கு, உரிய பாதுகாப்பு முறைகள், மற்றும் போதுமான உயிர்காக்கும் கருவிகள் என்பன படகுகளில் காணப்பட வேண்டும், இவை இல்லாது படகுகள் பயணிப்பதால் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.