வெறிநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் துடிதுடித்து பலி
Tamil nadu
India
GOAT
By Sumithiran
பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறியதில்17 ஆடுகள் துடிதுடித்து பலியான பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பட்டியில் அடைத்த நிலையில்

ஆட்டின் உரிமையாளரான முருகனிடம் 50 ஆடுகள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆடுகளை விற்றுள்ளார் . மிகுதி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் பட்டியில் அடைத்த நிலையில் அதிகாலைவேளை பட்டிக்குள் புகுந்த ஆறுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் அங்கிருந்த 17 ஆடுகளை கடித்துக் குதறின.
இதனால் துடிதுடித்து அத்தனை ஆடுகளும் பரிதாபகரமாக உயிரிழந்தன.
கால்நடைகள் மூலமே தனது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த அவர் செய்வதறியாது உள்ளார்.