இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டுள்ள பல கோடி பெறுமதியான தங்கம் மற்றும் பணம்

Sri Lanka Police Government Of Sri Lanka Sri Lanka Police Investigation Money Gold
By Sathangani Oct 15, 2025 04:54 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களால் சேகரிக்கப்பட்ட 140 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் உள்ளிட்ட சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் (F. U. Wootler) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 40 சந்தேகநபர்களில் 18 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

 இஷாரா செவ்வந்தி கைது

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளும், சர்வதேச சுற்றி வளைப்புக்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டுள்ள பல கோடி பெறுமதியான தங்கம் மற்றும் பணம் | 18 Out Of 40 Suspects On Red Notice Arrested

அதன் பிரதி பலனாக இதுவரையில் 40 சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்குள் 18 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டடத்துக்குள் கனேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனினும் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் நேபாளத்தில் இலங்கையின் விசேட காவல்துறை குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் : 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

சட்டவிரோத சொத்துக்கள் 

சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்கும் செயற்திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 2024இல் செப்டெம்பர் 21ஆம் திகதியிலிருந்து இது வரை 73 கோடி ரூபா பெறுமதியான 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள், 37 ஏக்கர் நிலப்பரப்பு, 67 கோடி ரூபா பணம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டுள்ள பல கோடி பெறுமதியான தங்கம் மற்றும் பணம் | 18 Out Of 40 Suspects On Red Notice Arrested

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 1,268 கிலோ கிராம் ஹெரோயினுடன் 56,000 சந்தேகநபர்களும், 1863 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 64 690 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 14,280 கஞ்சா மற்றும் கேரள கஞ்சா, 552 கிலோ கிராம் ஹசீஸ், 302 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 35 இலட்சம் போதை மாத்திரைகள் என்பவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். 

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! அழிவில் விளிம்பில் இலங்கை: அதிர்ச்சியில் காவல்துறை

கடலில் மிதந்து வந்த பொதிகள்..! அழிவில் விளிம்பில் இலங்கை: அதிர்ச்சியில் காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025