கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள பின்னணியில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவே இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கையாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னணியில் குறித்த கருத்து இஸ்ரேல் தரப்பிடம் இருந்து வெளியாகியுள்ளது.
அணுசக்தி திட்டம்
அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காக இப்பகுதியில் ஏராளமான போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை ஒன்று திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ஈரான் தலைநகரில் நடந்த இந்த தொடர் தாக்குதல் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, சைரன்கள் ஒலித்தவுடன், இஸ்ரேலிய இராணுவம், "இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக ஒரு முன்னெச்சரிக்கை எச்சரிக்கையை" வெளியிட்டதாகக் கூறியது.
மேலும், இஸ்ரேலின் விமான நிலைய ஆணையம் அனைத்து பொது விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அறிவித்து.
இதற்கிடையில், கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அனைத்து பணியாளர்களுக்கும் தங்குமிடம் வசதியை செயல்படுத்தியுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை அதன் அனைத்து குடிமக்களும் இதைச் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |