சிவப்பு பிடியாணை சந்தேகநபர் கட்டுநாயக்கவில் அதிரடி கைது
இலங்கையில் இரட்டைக்கொலைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2022.03.24 அன்று கடவத்தை காவல்துறை பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது ரி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இவர் நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையர் எனவும் கடவத்தை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |