கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் மீட்பு
புதிய இணைப்பு
காணாமல் போன தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவரும் இன்று (27) மாலை காலியில் உள்ள உனவடுன கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனன்கே காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெலிகம பிரதேச சபைத் தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் இன்று (27) நடைபெற்றது, குறித்த நிகழ்வின் போது இருவரும் கடத்தப்பட்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
தேர்தலுக்குச் சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற உறுப்பினர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபை நடவடிக்கை
இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
