போதைப்பொருளுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Drugs
By Sathangani
பிலியந்தலை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த சம்பவத்தில் 39 வயதான காவல்துறை பரிசோதகர் ஒருவரும் 32 வயதான காவல்துறை விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மொரட்டுவ காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |