தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : விசாரணைகள் தீவிரம்
இலங்கையிலிருந்து (Sri lanka) கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் (Tamil nadu) நுழைந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்து இறங்கியிருந்தனர்
இவ்வாறு வந்திறங்கியவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இராமேஸ்வரம் மரைன் காவல்துறையினர் இருவரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீவிர விசாரணை
குறித்த இருவரும் இலங்கையின் புத்தளம் (Puttalam) மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |