வெளிநாடொன்றில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியது பலர் பலி
மேற்கு நகரமான எல் ஆல்டோவில் பொலிவிய விமானப்படைக்குச் சொந்மான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்
சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து எல் ஆல்டோ விமான நிலையத்திற்கு விமானம் வந்து கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 18:15 மணிக்கு (22:15 GMT) இந்த சம்பவம் நடந்ததாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டு மத்தியவங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்ற வேளை விபத்து
அது ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலுள்ள வாகனங்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்பு அமைச்சகம் அதன் C-130 ஹெர்குலஸ் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், அது பொலிவியாவின் மத்திய வங்கிக்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றதாகவும் உறுதிப்படுத்தியது.

விமானத்தில் எட்டு பேர் இருந்தனர் என்று விமானப்படைத் தளபதி கூறினார். சிதறிய ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றதாகக் கூறப்படும் கூட்டத்தை கலைக்ககாவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
தீயணைப்பு வீரர்கள் குறைந்தது 15 பேர் இறந்ததாக முன்னதாகவே தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |