பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
2021 ஆம் ஆண்டுக்கான கபொத உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் 0718 15 67 17 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது slexamseo@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.
இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.