கடந்த ஆண்டு புலம்பெயர்ந்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டு புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளதாக ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சஹாரா பாலைவனம் அல்லது மத்தியதரைக் கடலைக் கடப்பது உள்ளிட்ட ஆபத்தான பாதைகளில் கிட்டத்தட்ட 9,000 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) செயல்பாட்டு துணை இயக்குநர் ஜெனரல் உகோச்சி டேனியல்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இறப்புகளின் அதிகரிப்பு
இதில், உலகின் பல பிராந்தியங்களில் இறப்புகளின் அதிகரிப்பு அத்தோடு துயரமான உயிர் இழப்பைத் தடுக்கக்கூடிய ஒரு சர்வதேச, முழுமையான பதில் நமக்கு ஏன் தேவை என்பதைக் காட்டுகிறது ? என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், இடம்பெயர்வு பாதைகளில் 8,938 பேர் இறந்த நிலையில் அதிகாரப்பூர்வ பதிவுகள் இல்லாததால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்