வாகன இறக்குமதி தொடர்பான மத்திய வங்கியின் மகிழ்ச்சி தகவல்
2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகரிக்கும் தேவை காரணமாக, 2025 ஆம் ஆண்டில் இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்காக சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முந்தைய மதிப்பீடான 1 பில்லியன் டொலர்களை விட அதிகம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களுக்கான தேவை
வாகனங்களுக்கான குறிப்பிடத்தக்க வரிகளுடன் இணைந்து, அதிக இறக்குமதி அளவுகள் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் மற்றும் பல ஆண்டுகளில் முதல் முறையாக வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைக் குறைக்க உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், வலுவான ஆர்வத்தின் ஆரம்ப அலைக்குப் பிறகு வாகனங்களுக்கான தேவை ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளதாக என்று தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 5 மணி நேரம் முன்
