ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப்
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது ஈரான் படைகள் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தகவல் பெற்றது. இதனால், அவர் பயணித்த புதிய Boeing 747-8 விமானத்திலிருந்து பழைய Air Force One-க்கு மாற்றப்பட்டார்.
அமெரிக்காவிற்கு கத்தார் வழங்கிய விமானம்
இந்த Boeing 747-8 விமானத்தை கத்தார் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதில் பழைய Air Force One-ல் உள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினர்.

ட்ரம்ப் இந்த மாற்றத்தை “பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க படையினருக்கு புதிய விமானத்தை காட்டுவதற்காக” என கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பாதுகாப்பு காரணமே உண்மையான காரணம் என உறுதிப்படுத்துகின்றன.
புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடு
இந்த சம்பவம், புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் கூட, “விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு இல்லை, ஆனால் விரைவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை, இந்த புதிய விமானம் பாதுகாப்பானது என்றாலும், கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அமெரிக்க ரகசிய சேவை பணிப்பாளர், “அமெரிக்க தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன” என எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |