மகனின் பிணை குறித்து சாந்த பண்டார வெளியிட்ட தகவல்!
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தனது மகனாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஊகங்களின் அடிப்படையில் மனிதர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனக் பிரஜை ஒருவரிடமிருந்து ரூபாய் இரண்டு கோடி நிதியைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரது மகன் அனுத பண்டார மற்றும் ஏனைய 5 சந்தேகநபர்களுக்குக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (27-07-2026) பிணை வழங்கியது.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு பேசிய சாந்த பண்டார, நாட்டின் நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் குறித்துத் தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “எனது மகன் மட்டுமல்ல, யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.
எனது மகனுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர அரசியல்
உண்மை எப்போதும் வெல்லும் இன்று அந்த உண்மை வென்றுள்ளது.
நீதித்துறைக்கு எங்களது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் பல கோணங்களில் நடத்திய விசாரணைகளைத் தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், ஊகங்களின் அடிப்படையில் ஒருவரைத் குற்றவாளியாக்குவது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தாம் இன்னமும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதன் காரணமாகவே இந்த விவகாரம் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |