தனிப்பட்ட நலன்களால் ஏற்பட்ட பேராபத்து - முன்னாள் அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
21 ஆவது திருத்த சட்டம்
அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தேவை என்று அவர் கூறுகிறார்.
தனிப்பட்ட நலன்களால் ஏற்பட்ட பேராபத்து
தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் இலங்கையை பின்னடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உத்தேச திருத்தமானது கடந்த கால குறைபாடுகளை போக்க நல்லதொரு ஆரம்பம் எனவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியை உயர்த்தவும் இது உதவும் என்றும் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.
??s progress was held back by constit. amendts. passed with individual & political interests in mind. Proposed amendment is a good start to overcome the shortcomings of that sordid past. All parties must support 21st amendment to restore public faith & to boost economic recovery.
— Dullas Alahapperuma (@DullasOfficial) May 29, 2022
