ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை வந்தடையவுள்ள 22 கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) இந்தியக் கப்பல்களின் போக்குவரத்து இடையூறுகளைத் தணிக்க இயலும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக ஈரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் சில விளைவுகளைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஜெய்சங்கர், ஈரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களின் போக்குவரத்து தடைகளை குறைக்க உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியக் கப்பல்கள்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

"தற்போது அவர்களுடன் (ஈரான்) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எனது பேச்சு சில விளைவுகளைத் தந்துள்ளது"
ஆனால், அனைத்து இந்தியக் கப்பல்களுக்கும் ஒரு பொது அனுமதி (blanket arrangement) இல்லை. ஒவ்வொரு கப்பலுக்கும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இரண்டு இந்தியக் கொடியுடன் செல்லும் எரிவாயு டேங்கர்கள் (Shivalik மற்றும் Nanda Devi) ஜலசந்தியைக் கடந்து சென்றன.
இது டெல்லி-தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேறியதன் விளைவாக இது நிகழ்ந்தது.
இருப்பினும், 22 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் இன்னும் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |