அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது
Dr Wijeyadasa Rajapakshe
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
By Vanan
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட மேலும் சில திருத்தங்களை உள்ளடக்கி புதிய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்ட இடைக்கால விதிகள், புதிய திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால விதிகள் நீக்கம்
அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை அதிபரிடம் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச திருத்தங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.