உந்துருளி விபத்தில் 22 வயது இளைஞன் பலி..! யாழ் கொட்டடியில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Accident
By Kanna
யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளதோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் யாழ்ப்பாண பிரதேசத்தை 22 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி