வியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
Sri Lanka
Vietnam
By Vanan
வியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வியட்நாமில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்த இலங்கையர்கள்
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் படகு மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
கடந்த 19ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட மேலும் 23 பேரில் ஆறு பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி