அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து: மூவர் பலி
அமெரிக்காவில் (USA) சிறிய ரக விமானம் ஒன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் விமானத்தில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் (Nebraska) இடம்பெற்றுள்ளது.
விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை
குறித்த சம்பவத்தில் இறந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
இதேவேளை கடந்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய விமானமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
