சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் எனவும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீர் வழங்கல் சபையின் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூவர் கைது
விசாரணையின்போது சந்தேகநபர்கள் தாம் அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காக நிலத்தைத் தோண்டியதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், நள்ளிரவு வேளையில் அதி உணர்திறன் கொண்ட பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணியில் ஈடுபட்டமை தொடர்பில் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படாததால், அவர்களிடமிருந்த அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஹேமர் இயந்திரமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரையும், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14