சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான 3 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Sumithiran
காவல் தடுப்பு உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பேருந்து, கார் மற்றும் ஒரு கெப் வண்டியை காவல்துறையினர்பறிமுதல் செய்துள்ளனர்.
மித்தெனிய பகுதியில் உள்ள சம்பத் மனம்பேரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மேற்கு மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தொடர்புடைய வாகனங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி சமீபத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்