மட்டக்களப்பில் ஐந்து மாதத்தில் பறிபோன பெருமளவு மனித உயிர்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran May 28, 2025 02:57 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மட்டக்களப்பு(batticaloa) மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளமை மிகவும் கவலையானது  எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாது பிரயாணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு கிழக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் இன்று புதன்கிழமை(28) இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு காவல்துறைக்கு கட்டளையிட்டார்

 கடந்த வருடம் 72 பேர் உயிரிழப்பு

 மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 611 வீதி விபத்தில் 72 பேர் உயிரிழந்ததுடன் 1975 பேர் மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் ஐந்து மாதத்தில் பறிபோன பெருமளவு மனித உயிர்கள் | 32 People Killed Accidents Batticaloa In 5 Months

இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25 ம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த விபத்துக்களுக்கு முதலாவது காரணம் வேகமாக வாகனங்களை செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே ஆகும்

எனவே மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர். சந்திவெளி, வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளது அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பயணிக்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்கங்களை விடவும் விடுதலை புலிகளின் தலைவருக்கு இருந்த அக்கறை : தென்னிலங்கையிலிருந்து ஒலிக்கும் குரல்

சிறிலங்கா அரசாங்கங்களை விடவும் விடுதலை புலிகளின் தலைவருக்கு இருந்த அக்கறை : தென்னிலங்கையிலிருந்து ஒலிக்கும் குரல்

 தலைக்கவசம் அணியாதவர்களுக்கு கால அவகாசம்

அதேபோல பலர் தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பிரயாணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது. ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைக்கவசம் அணியுமாறு 7 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் ஐந்து மாதத்தில் பறிபோன பெருமளவு மனித உயிர்கள் | 32 People Killed Accidents Batticaloa In 5 Months

போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இல்லை எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எதுவித மோதல்களும் இல்லை..! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

எதுவித மோதல்களும் இல்லை..! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

 வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள்

அதேவேளை இந்த குறித்த பிரதேசங்களில் வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த காவல்துறை நிலைய காவல்துறைக்கு கட்டளையிட்டார்.

மட்டக்களப்பில் ஐந்து மாதத்தில் பறிபோன பெருமளவு மனித உயிர்கள் | 32 People Killed Accidents Batticaloa In 5 Months

  இந்த வீதி பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போதும் பொதுமக்களின் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பு கூறவேண்டிய சிலர் வருகை தரவில்லை. எனவே அடுத்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் வராத திணைக்கள மற்றும் தனியார் பேருந்து சங்கம், முச்சக்கரவண்டி சங்கங்கள், உட்பட்டவர்கள் வராத இடத்தில் அவர்களுக்கு எதிராக அந்த திணைக்கள செயலாளர்களுக்கு முறைப்பாடு செய்யப்படும் என்றார்.

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் - தமிழரசுக்கட்சி அறிவிப்பு

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் - தமிழரசுக்கட்சி அறிவிப்பு

காணொளி படங்கள் மூலமாக காட்சிப்படுத்தப்பட்ட படங்கள்

 அதேவேளை மாவட்டத்தில் பழுதடைந்த வீதிகள் மதகுகள், மற்றும் உடைந்துள்ள வடிகான் மூடிகள், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளமை, தலைக்கவசம் அணியாது பயணிப்பவர்கள் போன்றவை தொடர்பான குறைபாடுகளை காணொளி படங்கள் மூலமாக காட்சிப்படுத்தி அந்தந்த துறை சார்ந்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் ஐந்து மாதத்தில் பறிபோன பெருமளவு மனித உயிர்கள் | 32 People Killed Accidents Batticaloa In 5 Months

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015