323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பரிசோதனைகளின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
நீடிக்கப்பட்டுள்ள காலம்
அந்தவகையில், இந்த நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மாத்திரமே அடங்கியிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்