திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள 36 கை குண்டுகள்...!
திருகோணமலையில் 36 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
கிண்ணியா காவல் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் நேற்று (04) இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் இவை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவிலாறு குளம்
மாவிலாறு குளம் உடைப்பையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடியதையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்யும் போது அங்கிருந்து வெளிவந்த குண்டுகளை கண்டு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு அங்கு கைவிடப்பட்டிருந்த 36 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்பின்பு, நீதிமன்ற உத்தரவை பெற்று இதனை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |