நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : 14 நாட்களில் 37 பேர் பலி
இலங்கையில் ஏப்ரல் மாதத்தின் கடந்த 14 நாட்களில் வீதி விபத்துக்களால் 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துக்களில் 99 பேர் படுகாயமடைந்ததாகவும், 335 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் நேற்று (15) மற்றும் நேற்று முன்தினம் (14) நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பட்டாசு விபத்துக்கள் குறைவு
அதன்படி, எல்பிட்டிய, எதிமலே, பிட்டிகல, மிஹிந்தலை, குருநாகல் மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த 412 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் பட்டாசு விபத்துக்களால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
