சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா

United Nations Tamils Sri Lanka Sri Lankan political crisis
By pavan Sep 05, 2022 02:25 PM GMT
Report

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோரும் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் தீர்வுகளையும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் என கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அலி சப்ரி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று ஜெனீவா பயணமாகின்றது.

51 வது கூட்டத்தொடர்

சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா | 51Th Session Human Rights Council 2022 Sri Lanka

இந்தக் குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உட்பட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றவுள்ள அலி சப்ரி, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனீவா அமர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்துரைத்ததாவது,

"சிறிலங்கா அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் சபாநாயகர் தலைமையில் இது குறித்ததான தீர்மானம் எடுக்கப்படும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துதல்

சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா | 51Th Session Human Rights Council 2022 Sri Lanka

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அளவுகோல்களின் படி, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துவதோடு சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை சமநிலைப்படுத்த முற்றிலும் புதியதொரு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இலங்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீண்ட காலம் நீடிக்க கூடிய முழுமையான தீர்வுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான உண்மையை தெரிந்து கொள்ள அனைவரும் ஒன்றினைந்து ஒரு பொறிமுறையின் கீழ் செயற்பட வேண்டும்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020