சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா

United Nations Tamils Sri Lanka Sri Lankan political crisis
By pavan Sep 05, 2022 02:25 PM GMT
Report

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கோரும் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் தீர்வுகளையும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் என கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அலி சப்ரி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று ஜெனீவா பயணமாகின்றது.

51 வது கூட்டத்தொடர்

சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா | 51Th Session Human Rights Council 2022 Sri Lanka

இந்தக் குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உட்பட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றவுள்ள அலி சப்ரி, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜெனீவா அமர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்துரைத்ததாவது,

"சிறிலங்கா அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் சபாநாயகர் தலைமையில் இது குறித்ததான தீர்மானம் எடுக்கப்படும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துதல்

சர்வதேச பொறிமுறையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - பகிரங்கமாக கூறிய சிறிலங்கா | 51Th Session Human Rights Council 2022 Sri Lanka

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அளவுகோல்களின் படி, அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்துவதோடு சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் நடைமுறைப்படுத்தக் கூடிய விதத்தில் தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை சமநிலைப்படுத்த முற்றிலும் புதியதொரு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இலங்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நீண்ட காலம் நீடிக்க கூடிய முழுமையான தீர்வுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான உண்மையை தெரிந்து கொள்ள அனைவரும் ஒன்றினைந்து ஒரு பொறிமுறையின் கீழ் செயற்பட வேண்டும்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024