மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி

Sri Lankan Tamils Batticaloa Shanakiyan Rasamanickam
By Shadhu Shanker Aug 02, 2024 11:15 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (Shanakiyan Rasamanickam ) தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு(Batticaloa)  எருவில் பொது நூலகத்திற்கு புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (01.08.2024) இடம்பெற்றது.இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… மட்டக்களப்பு மக்கள் மட்டக்களப்பு அபிவிருத்தி அடையும் என நம்பி இரண்டு இராஜாங்க அமைச்சர்களை உருவாக்கி விட்டனர். அதனை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீள நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் : சஜித்

வங்குரோத்து நிலையிலிருந்து மீள நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் : சஜித்

ஜனாதிபதியின் விசேட நிதி

கிராமங்களுக்கு கட்டாயம் அவசியமான வாசிகசாலையை ஒப்பிடும் போது புத்தகங்கள் குறைவாக காணப்படுகின்றன. மட்டக்களப்பில் பாரிய நூலகம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள பொது நூலக கட்டடத்திலலுள்ள ஒன்று கூடல் மண்டபம் முழுவதும், புத்தகங்களால் மூடிகாணப்படுகிறது.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி | 596M Fund Approved For Batticaloa Projects

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மாத்திரம் ஏன் ஜனாதிபதி விசேட நிதி வழங்கினார் என கேட்பவர்களும் உள்ளார்கள். நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் எதுவும் கேட்கவில்லை.

நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காதவர்கள் ஏதோ ஒன்றை ஜனாதிபதியிடம் தங்களுக்காகப் பெற்றுள்ளார்கள். என்னிடம் கேட்டதற்கிணங்க மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கேட்டதற்கிணங்க 596 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதில் முதற்கட்டமாதக 400 மில்லியன் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதி மக்களின் பொது அபிவிருத்திட்டங்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன. எருவில் கிராமத்தின் பொது மைதானத்திற்கு 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் நாம் இருக்கின்றோம்.

போட்டியை சமனில் முடித்த இலங்கை அணி: இறுதியில் தடுமாறிய இந்தியா

போட்டியை சமனில் முடித்த இலங்கை அணி: இறுதியில் தடுமாறிய இந்தியா

அரசியல் தீர்வு 

ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு நிதி ஒதுக்கீட்டினை வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியின் காரியாலயத்தில் நித்திரை கொள்ளாத குறையாக திரிகின்றனர். மைதான புனரமைப்புக்கு என 160 மில்லியன் இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த நிதியில் மின் விளக்குகள் மாத்திரம்தான் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக நாம் அறிகின்றோம்.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை: சாணக்கியன் அதிரடி | 596M Fund Approved For Batticaloa Projects

குறிப்பாக மட்டக்களப்பை சிங்கப்பூராக மாற்ற போறேன் என்று கோஷமிட்டு வந்து திரியும் இராஜாங்க அமைச்சர்களே உள்ளனர். இதற்கான பாடத்தை இனி வரும் தேர்தலில் மக்கள் புகட்ட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களுக்காக நாம் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

எருவில் பாடசாலைக்கு அருகில் நாம் அண்மையில் உழவர் சிலை ஒன்றை திறந்து வைத்தோம் ஆனால் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் புத்தர் சிலையை கொண்டு வைக்க கூடியவர்கள் அவ்வாறு புத்தர் சிலையை வைத்தால்தான் அவர்களுக்கு மதுபானசபை அனுமதிப்பத்திரங்கள் இன்னும் கிடைக்கும். என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021