சிறிலங்கா காவல்துறையை சேர்ந்த எழுவர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்
காவல்துறையில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம்
இவர்களில் ஒரு உதவிக் காவல் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் காவல் கண்காணிப்பாளர், மூன்று காவல் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்குவர்.
விபரம் வெளியானது
உதவிப் காவல் அத்தியட்சகர் எம்.பி.சி.சானக டி சில்வா (குற்றப் புலனாய்வுத் திணைக்களம்) பிரதான காவல் பரிசோதகர் சிதாரா சஞ்சய் பெரேரா (களுத்துறை காவல் பயிற்சிக் கல்லூரி), காவல் பரிசோதகர் பி.கே.ஆர்.எம்., வசந்தகுமார (சட்டப் பிரிவு), காவல் பரிசோதகர் எஸ். டபிள்யூ ஏபிஆர் சமரவிக்ரம (சட்டப் பிரிவு), காவல் பரிசோதகர் டபிள்யூ ஜிபி குமாரசிங்க (மத்திய மாகாண சட்டப்பிரிவு), காவல் பரிசோதகர் பிஎம்சி சண்டருவன் (சட்டப் பிரிவு), உப காவல் பரிசோதகர் எம்.டி.சி.ஜெயமினி (வடமேல் மாகாண சட்டப் பிரிவு) ஆகியோரே இவ்வாறு சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டவர்களாவர்.
படங்கள் நன்றி - லங்காதீப

