யாழில் சோகம் : மூச்செடுக்க சிரமப்பட்ட சிசுவிற்கு நேர்ந்த கதி
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்வம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி (Chavakachcheri), மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தையே நேற்று (23.06.2025) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை
இந்நிலையில் நேற்றையதினம் (22) பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு பூநகரிக்கு சென்றவேளை மூச்சு எடுப்பதற்கு குழந்தை சிரமப்பட்டுள்ளது.
பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
பின்னர் குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
