மடகாஸ்கர் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! 50 நாட்களாக உணவு இன்றி வாழும் அவலம்

CID - Sri Lanka Police Sri Lanka Sri Lanka Fisherman Madagascar
By Raghav Jul 19, 2025 07:33 AM GMT
Report

சர்வதேச கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் மடகாஸ்கர் சிறையில் அவதிப்படுவதாக தென்னிலங்கையின் அச்சு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், CHW 899 என்ற எண் கொண்ட W.P. குமார என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 'ரூத் பாபா VI” என்ற படகில் 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி வென்னப்புவ துறைமுகத்திலிருந்து கடலக்கு சென்றுள்ளனர். 

இதன்போது சர்வதேச கடற் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜூன் 2 ஆம் திகதி மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தி : அம்பலமாகும் தகவல்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் காந்தி : அம்பலமாகும் தகவல்

மடகாஸ்கர் அரசாங்கம்

எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகாஸ்கர் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மடகாஸ்கர் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! 50 நாட்களாக உணவு இன்றி வாழும் அவலம் | 8 Sri Lankan Fishermen In Madagascar Jail

ரூத் பாபா VI படகின் கேப்படன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் படகில் 8 பேர் உள்ளனர். இந்த நாட்டில் நாங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளோம். 

எங்களுக்கு உணவு அல்லது பானம் வழங்கப்படவில்லை. அங்கு இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். 

ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு காயங்கள் உள்ளன. சிலரின் கைகால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகி வருகின்றன. அவர்கள் உள்ளே இருக்கும் நோய்களுக்கு மருந்து கொடுப்பதில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் அமைச்சர்

வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் அமைச்சர்

இலங்கை கடற்றொழிலாளர்

மேலும் இந்த சம்பவம் தொடர்பில், குறித்த அச்சு ஊடகம் மடகாஸ்கர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பில் வினவிய போது, கைது செய்யப்பட கடற்றொழிலாளர்கள் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மடகாஸ்கர் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! 50 நாட்களாக உணவு இன்றி வாழும் அவலம் | 8 Sri Lankan Fishermen In Madagascar Jail

செல்லுபடியாகும் மீன்பிடி உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் 08 பேர் தொடர்பில் விசாரிக்க மடகாஸ்கர் அரசாங்கத்தைத் தொடர்புகொள்வதில் சிக்கல் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் காலமானார்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026