இலங்கையிலிருந்து அதிகாலைவேளை நாடுகடத்தப்பட்ட பெருமளவு சீனர்கள்
இலங்கையில்(sri lanka) தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன (china)நாட்டினர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர், மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு,நேற்று( 06/20 )அதிகாலையில் சிறப்பு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டனர் என்று கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த சீன நாட்டினர் நாட்டின் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர் அவர்களை நாடு கடத்தும் முடிவின் அடிப்படையில் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
05 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட சீன நாட்டவர்கள்
05 பேருந்துகளில் ஏற்றப்பட்ட சீன நாட்டினர் குழு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சீன நாட்டவர்கள் குழுவுடன் இந்த விமானத்தில் 85 உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் மற்றும் 172 சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸில் அனுப்பிவைப்பு
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் இந்த சிறப்பு விமானம் UL-880, 2020 ஜூன் 20 அன்று அதிகாலை 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோவுக்குப் புறப்பட்டதை விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
