யாழில் பாழடைந்த வீட்டில் சிக்கிய பெருந்தொகையான போதைப்பொருள்
Sri Lanka Army
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Raghav
யாழ். (Jaffna) வல்வெட்டித்துறை (Valvettithurai) பகுதியில் பெருந் தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் பலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று (27.03.2025) குறித்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
யாழ். வல்வெட்டித்துறை - பொலிகண்டிப் (Polikandy) பகுதியில் பழைய வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கையின் போது யாரும் கைதுசெய்யப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகள் : பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


2ம் ஆண்டு நினைவஞ்சலி