வெளிநாடொன்றில் பயங்கர தீ விபத்தில் 51 பேர் பலி : நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
ஐரோப்பிய நாடொன்றில் நைட் கிளப்பில் பாரிய தீ விபத்து சம்பவமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (16) அதிகாலை தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் (North Macedonia) உள்ள ஒரு நைட் கிளப்பில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை
இதன்போது, மேற்கூரை தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, 1,500 பேர் அங்கிருந்தததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்