உடன் முககவசம் அணியுங்கள் -வெளியான விசேட அறிவித்தல்
Colombo
Face Mask
Sri Lankan Peoples
By Sumithiran
ஹோமாகமவை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு இன்று இரவு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அந்த பிரிவு வெளியிட்டுள்ளது.
இரசாயன களஞ்சியசாலையில் பற்றியது தீ

ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி