வாகன விபத்தில் பலியான காவல் துறை அதிகாரி
புவக்பிட்டிய (Puwakpitiya), துன்மோதர அவிசாவளை (Avissawella) வீதியில் மிரிஸ்குடு வளைவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று (29) பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மிரிஸ்குடு வளைவில் சென்று கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று எதிரில் வந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் , மற்றைய அதிகாரி மற்றும் பாரவூர்தியின் சாரதி சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்மைக்கான காரணம் தெரியாத நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |