மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் - சபையில் ரணில்
இலங்கையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்கள் வெளிநாடு செல்லும் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி ஏதாவது தீர்வு காண வேண்டும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நிலையியற் கட்டளைகள் தொடர்பாக நேற்று(29) நாடாளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு சிறிலங்கா அரசாங்கம் அறுபது இலட்சம் செலவழிப்பதாக தெரிவித்த அதிபர், தாம் இலங்கையில் தங்கியிருப்பதற்காக அவ்வாறே செலவு செய்வதாகவும் தெரிவித்தார்.
பிரச்சினைக்கான தீர்வு
பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழுக்களை பார்க்கும் போது அந்த நாடுகள் எமக்கு வழங்கும் உதவிகளை விட நாம் அந்த நாடுகளுக்கு செய்யும் உதவிகளே அதிகம் என ரணில் தெரிவித்தார்.
எனினும் இந்த பிரச்சினை எவ்வாறானதாக இருந்தாலும் அரசாங்கம் பாதிக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கான தீர்வை நாம் காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.