இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரான்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள்! 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்
மூதூர் படுகொலை
இலங்கையில் பணியாற்றிய பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் திருகோணமலை மாவட்டம் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று நினைவு கூரப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவத்திற்கு இதுவரை நீதி வழங்கப்படாத நிலையில் நினைவு கூரப்பட்டது.
இலங்கையில் பணியாற்றிய பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் திருகோணமலை மாவட்டம் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
திருகோணமலை மூதுார் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்ததின் போது, கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மூதுாரில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே அவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஊழியர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகத்தில் வைத்து முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் பாதுகாப்புப் படையினரே என்றும் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் ஏ.சி.எப். நிறுவனம் கூறிவருகிறது.
சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்த முக்கிய சம்பவங்கள்
அரசாங்கம் உள்நாட்டு யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளில் ஈடுபட்டது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்த முக்கிய சம்பவங்களாக அக்சன் கொன்றா வாஃ படுகொலை மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ஆகியன காணப்படுகின்றன.
எனினும் அந்த சம்பவங்களுக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில், உயிர்களை பறிகொடுத்த உறவுகள் இன்றும் ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதற்கு தடைகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அக்சன் கொன்றா வாஃ பணியாளர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருகோணமலையில் நினைவு கூரப்படாத நிலையில் பிரான்ஸில் நினைவு கூரப்பட்டது.



சந்திரிகாவின் இனப்படுகொலைகளுக்கு அநுரவும் பொறுப்புக்கூற வேண்டும்! 24 நிமிடங்கள் முன்
