இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஃபாக்லாந்து தீவுகள் மீதான தங்கள் நாட்டின் உரிமைகோரலை ஆதரிக்கும் பதாகையுடன் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த போட்டியின் இறுதி நிமிடங்களில் ஆர்ஜன்டீனா அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 கோல்களை பெற்று இறுதிப்போட்டிகான பாதையை அமைத்துக்கொண்டது.
ஸ்பெயினுடன் இறுதிப் போட்டி
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன் அர்ஜென்டினா அணி மோதவுள்ளது.

இறுதி விசில் ஒலித்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாந்து தீவுகள், பிரித்தானியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான இறையாண்மைத் தகராறின் ஒரு பொருளாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.
வரலாற்று பின்னணி
அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவுக் கூட்டத்திற்காக, இரு நாடுகளும் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை போரிட்டன.

74 நாட்கள் நீடித்த இந்த மோதலில் 655 அர்ஜென்டினா வீரர்களும், 255 பிரித்தானிய வீரர்களும் உயிரிழந்தனர்.
2014-ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பு , அர்ஜென்டினா கால்பந்து சங்க வீரர்கள் அதே செய்தி அடங்கிய பதாகையை ஏந்தி நின்றதைத் தொடர்ந்து, ஃபிஃபா அந்தச் சங்கத்திற்கு £20,000 அபராதம் விதித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |