இலங்கையில் இந்திய அதானி குழுமத்தின் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்! பதவி விலகிய பணிப்பாளர்
அதானி குழுமத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவது மேலும் தாமதமாகும் என்று மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அதானி குழுமம் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ள. இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆர்வமாக உள்ளார்.
சுலக்ஷன ஜயவர்தனவின் எதிர்ப்பு
எனினும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன கடந்த வாரம் இத் திட்டத்திற்கு எதிராகவே பதவி விலகியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மேலும் கால தாமதம் ஏற்படுகின்றது என்று சிரேஸ்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இத் திட்ட ஆவணத்திற்கு அமைச்சு கைசாத்திட்ட போதும் பணிப்பாளர் நாயகத்தின் முடிவால், உடன்படிக்கை கைச்சாத்திடல் தாமதாமாகியுள்ளது.