இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம்

Mannar Sri Lanka India Gautam Adani
By Sathangani Jun 30, 2024 11:02 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கொழும்பு துறைமுகத்தின் (Colombo Port) மேற்குமுனை அபிவிருத்தி மற்றும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையின் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபல்ட் கனிமங்களை (Cobalt minerals) அகழ்வதற்கான நடவடிக்கையில் தாய்வானை (Taiwan) சேர்ந்த உமிகோர் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் (Adani Group) செயற்படவுள்ளது என இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கனிமங்கள் பல தொழில்துறைகளுக்கும் இராணுவ பயன்பாட்டிற்கும் மிகவும் அவசியமானவை, இது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து அலி சப்ரி வெளியிட்ட தகவல்

கச்சத்தீவு விவகாரம் குறித்து அலி சப்ரி வெளியிட்ட தகவல்

கடற்படுக்கை உரிமை

இரு நாடுகளிற்கும் இடையிலான கடற்படுக்கை உரிமை பிரச்சினைக்கு தீர்வை கண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பதிந்துள்ள பெறுமதிமிக்க கனியங்களை கண்டறிவதற்காக இந்தியாவுடன் கூட்டு சேர்வதன் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவதற்கு இலங்கை எண்ணியுள்ளது.

ஐக்கியநாடுகளின் (UN) கடல்சட்ட ஒப்பந்தத்தின் படி இலங்கை தனது கண்ட அடுக்கினை 200 கடல்மைல்களில் இருந்து நீடித்துள்ளது. 2009 இல் சர்வதேச கடற்படுக்கை ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தினை தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளது.

இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம் | Adani Project To Mine Seabed Minerals In Sri Lanka

தற்போது இலங்கைக்கு கடற்கரையிலிருந்து 200 மைல்களிற்கு விசேட உரிமை காணப்படுகின்றது. இலங்கை இதன் காரணமாக மத்திய இந்திய சமுத்திரத்தில் கோபல்ட்டுகள் நிறைந்த பெரோமங்கனீஸ்; மேலோடுகளை பொருளாதார நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம்.

எனினும் சர்வதேச கப்பல் பாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இதனை முன்னெடுக்கவேண்டும். இந்தியாவும் தனது எல்லையிலிருந்து 350 கடல்மைலிற்கு உள்ள தனது கண்ட அடுக்கிற்கு உரிமையை கோரியுள்ளது. இந்தியா அதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்ததும் அகழ்வில் ஈடுபடுவதற்காக காத்திருக்கின்றது.

GRS61FD

கோபல்ட் கனிமங்கள்

இந்த சர்ச்சையை தீர்ப்பதற்கு இரு நாடுகளிற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை காத்திருக்க விரும்பாத இந்தியா கோபால்ட் நிறைந்த பகுதிகளை ஆராய்வதற்காக சர்வதேச கடற்படுக்கை அதிகார சபையிடம் 2024 ஜனவரி முதலாம் திகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

எனினும் அபானசி நிக்கிட்டின் கடல்மலைப்பகுதி இலங்கையின்அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவித்து சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை இந்தியாவின் இந்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது. இது குறித்து சர்வதேச அமைப்பு இந்திய அதிகாரிகளிற்கு அறிவித்துள்ளது.

இலங்கையின் பெறுமதியான கனிய வளத்தில் கண்வைத்த அதானி நிறுவனம் | Adani Project To Mine Seabed Minerals In Sri Lanka

எனினும் சர்வதேச கடற்படுக்கை அதிகார சபை மார்ச் மாநாட்டில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற விதத்தில் இந்தியா தனது பதிலை அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் இருநாடுகளும் இந்த விவகாரத்திற்கு பரஸ்பர இணக்கப்பாட்டுடன் தீர்வை காணவேண்டிய நிலையில் உள்ளன.

இலங்கை கடற்பரப்பில் சீன கப்பல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்கு உட்படாத இந்து சமுத்திர கடற்படுக்கையை ஆராய்வதற்கான உரிமையை இந்தியா கோருகின்றது.

இலங்கையின் அதிகாரத்தின் கீழ் வரும் கோபால்ட் அதிகம் காணப்படும் அபனசி நிகிடின் கடல்மலையை ஆராய்வதற்கும் இந்தியா விரும்புகின்றது. இந்த கடல்மலையில் பில்லியன் டொலர்கள் பெறுமதியான கோபால்ட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024