ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு விவாதம் இன்று!
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முதற்தடவையாக இடம்பெற்றது.
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் மீதான விவாதம் இன்று மீண்டும் நடைபெறும் எனவும், விவாதத்தின் பின்னர் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெறவுள்ள கூட்டங்கள்

இதேவேளை, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்காக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த பல திருத்தங்களுக்கு நியாயமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக சந்திம வீரக்கொடி எம்.பி. எவ்வாறாயினும், குறித்த சட்டமூலம் தொடர்பில் தமது கட்சி முன்வைத்துள்ள திருத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அதற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பதாக சமகி ஜனபலவேகய கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க நிதிக் குழு, அரசாங்கக் கணக்குக் குழு, பொது நிறுவனங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான குழு, நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் கூட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்