மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு
CID - Sri Lanka Police
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan protests
By Kiruththikan
கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து 22 பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுள் பிரதி காவல்துறை மா அதிபர் தென்னக்கோனும் அடங்குவர் என லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.