எயர் பிரான்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் - ரியாத் மற்றும் பெய்ரூட் விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக டுபாய் மற்றும் சவூதி அரேபிய தலைநகர் ரியாதிற்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எயர் பிரான்ஸ் (Air France) விமான நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், சவூதி தலைநகர் ரியாதிற்கான விமான சேவைகள் ஜூலை 24 ஆம் திகதி வரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரத்திற்கான சேவைகள் ஜூலை 27 ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விமான சேவைகள்
அத்தோடு, லெபனானின் பெய்ரூட் நகருக்கான விமான சேவைகள் எதிர்வரும் ஒகஸ்ட் இரண்டாம் திகதி வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எயர் பிரான்ஸ் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்