சர்வ கட்சி அரசை அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் -வெளியானது அறிவிப்பு
சர்வ கட்சி அரசாங்கம்
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 113 பேரின் ஆதரவு தமது குழுவிற்கு ஏற்கனவே உள்ளதாகத் தெரிவித்த அவர், அரச தலைவர் யாராக இருந்தாலும் இந்த அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றுக்கு அதிகாரம்
அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்திற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமையும் சர்வகட்சி அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டார்கள் எனவும் கொள்கைகளை வகுத்து அமைச்சர்கள் அந்தக் கொள்கைகளை அமுல்படுத்தும் தலைமைக் குழுவில் இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமரை நியமிக்கும் முறை தொடர்பில் கலந்துரையாடியதாகவும், சுமார் ஒரு வாரத்தின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
