மூன்று பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகள் . வலிகளோடு வாழும் குடும்பம்
வறுமைகள் வலிகள் நோய்கள் என எல்லாமே ஆட்கொண்டுள்ள நாடக எமது நாடும் வலிகளோடு வாழும் மக்களாக எம் மக்களும் வாழ்ந்து வருவது உலகறிந்த ஒன்றே.
அந்த வரிசையில் வறுமையோடு வலிகளையும் பெற்று மீளாத்துயரில் வாழ்ந்து வரும் சுதுமலை கிழக்கு மானிப்பாயை சேர்ந்த ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்களை சந்திக்கிறது ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி.
ஆறு பிள்ளைகளில் மூவர் மாற்றுத்திறனாளிகள், எல்லோரிடமும் காட்டியாகி விட்டது இனி எவரிடம் காட்டியும் எந்த பயனும் இல்லை என்று இன்று வரை அவர்களை தோளிலே தாங்கி வருகின்றார் தந்தையான தர்மலிங்கம்.
சீவல் தொழிலாளியான அவர் வயது சென்றதன் காரணமாக தொழில் இருந்து விலத்தி கொள்ள குடும்பத்தின் வருமானம் கேள்விக்குறியாகிறது.
வலிகளோடு போராடி வரும் அக் குடும்பம் இப்போது வறுமையோடும் போராடி வருகின்றது.
இவர்கள் இந்த வறுமையில் இருந்து ஒரு படி மேல வர உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
மகிழ்ச்சியாய் வாழப்போவது எம்மில் ஒருவரே ...
தொடர்புகளுக்கு
IBC தமிழ் தாயகக்கலையகம் +94212030600/ +94767776363
ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி