இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கொடிய Torpedo தாக்குதல்! ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய கொடிய Torpedo தாக்குதலை "ஒரு அட்டூழியம்" என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கண்டித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா வருத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேற்று இலங்கை கடற்கரையில் ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா மூழ்கியதில் குறைந்தது 87 ஈரானிய வீரர்களின் உடலை இலங்கை கடற்படை மீட்டுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
"ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி X தள பதிவில் கூறியுள்ளார்.
முன்னறிவிப்பு இன்றிய தாக்குதல்
கிட்டத்தட்ட 130 அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச கடலில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது.
The U.S. has perpetrated an atrocity at sea, 2,000 miles away from Iran's shores.
— Seyed Abbas Araghchi (@araghchi) March 5, 2026
Frigate Dena, a guest of India's Navy carrying almost 130 sailors, was struck in international waters without warning.
Mark my words: The U.S. will come to bitterly regret precedent it has set. pic.twitter.com/cxYiI9BLUk
“என் வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்காக கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
அப்பாஸ் அராச்சி, ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ தாக்கியதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |