பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம்15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்லுபடியாகும் காலம்
குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் நாளையுடன் (28) நிறைவடையவிருந்த நிலையிலேயே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 21 முதல் பெப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |