கொழும்பு தமிழ் சங்கத்தின் முக்கிய அறிவித்தல்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நாளைமறுதினம் (25) காலை 10.00 மணிக்கு சங்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைத்து உறுப்பினர்களும் அதில் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகத் தெரிவு
சங்க யாப்பு விதிகள் மீறப்பட்டுக் கொண்டிருப்பதால், சங்க மாண்பையும் சங்கத்தின் ஜனநாயகக் கட்டமைப்பையும் காப்பாற்றும் நோக்கில் அனைத்து உறுப்பினர்களும் பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற வேண்டும் என்று ஆயுட்கால உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது பொதுச் சபை உறுப்பினர் ஒவ்வொருவரினதும் பிரதான கடமை. புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.
அதேவேளை, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகளை அம்பலப்படுத்திச் சர்வாதிகாரச் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் இருந்து சங்கத்தின் மாண்பையும் சங்க ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுப்பினர்கள் அனைவரும் பொதுச் சபைக் கூட்டத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
